42 ஆண்டுகள் மூடப்பட்ட பெகுன்கோடர் (Begunkodor) ரயில் நிலையம் – இந்தியாவின் பேய் கதை | உண்மை என்ன?
பெகுன்கோடர் (Begunkodor) ரயில் நிலையம் – அறிமுகம்
42 வருடங்களாக ஒரு இரயில் நிலையம் திறக்கப்படாமல் இருந்தது பற்றி தெரியுமா? காரணம் கேட்டால் பேய் கதை சொல்கிறார்கள். அதுவும் இந்தியாவில் மிக முக்கியமான இடத்தில் இருக்கும் இடம்.
இந்த இரயில் நிலையம் முடியதற்கும், 42 வருடங்கள் கழித்து அதை மீண்டும் திறந்ததற்கும் காரணம் 2 பெண்கள். இரண்டு பேருமே வெள்ளை நிற உடைதான் உடுத்துவார்கள். அது பற்றி தெரியுமா?
இன்றளவும் இந்தியாவில் 10 அமானுஷ்யம் நிறைந்த இரயில் நிலையங்களில் ஒன்றாக இருக்கும் இரயில் நிலையம் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
சுதந்திரத்துக்குப் பிறகு உருவான தேவைகள்
பெகுன்கோடர் ரயில் நிலையம் உருவான கதை
இவர்கள் கோரிக்கையை ஏற்று அங்கு ரயில் நிலையம் அமைக்க ஒப்புதலும் அளித்தது அப்போதைய மத்திய அரசாங்கம். ஆனால் அவர்களுக்கு மிக பெரிய தடையாக இருந்தது போதுமான இடம் அங்கு அரசாங்கத்திற்கு இல்லாதது. இதனால் அந்த பணி தடைபட்டது.
இதை அறிந்த சந்தால் பழங்குடியினரின் இரணியாக இருந்த லச்சன் குமாரி இரயில் நிலையம் அமைக்க தேவையான மிக பெரிய இடம் வழங்கினார். அது சரியாக 1960 இராணி லச்சன் குமாரியின் உதவியுடன் இரயில் நிலையம் தனது முதல் சேவையை துவங்கியது. நிலைய அதிகாரி (Station master) பயணச்சீட்டு விற்பனை செய்பவர், மக்கள் என மிகுந்த பரபரப்பாக இருந்தது.
ஆரம்ப கால வெற்றியும் வளர்ச்சியும்
நிலைய அதிகாரி அனுபவம் & பயம்
அந்த நிலைய அதிகாரி அதை நம்பும் படியாக இல்லை. ஒரு நாள் இரவு 11 மணி. கடிகார மணி 11 முறை ஒலிக்கிறது. எதிர்ச்சியாக வெளிய வந்து பார்க்கிறார். ஒரு நிமிடம் உறைந்து போகிறார். அதே வெள்ளை நிற உடை உடுத்திய பெண் ரயில் வரும் திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அதை கண்ட station master அந்த பெண்ணை நோக்கி ஓடுகிறார். ஆனால் அவர் போவதற்குள் ரயில் அந்த பெண்ணின் மீது மோதுகிறது.
மிரண்டு நிக்கிறார் என்ன செய்வது என்று அறியாது. ரயில் சென்ற பிறகு சடலத்தை பார்த்து விட்டு உதவிக்கு ஆட்களை அழைக்கலாம் என்று நிக்கிறார். ரயில் தனது இறுதி பெட்டியை இழுத்து கொண்டு மறைந்தது. Station master தேடுகிறார், பெண்ணின் சடலத்தை காணவில்லை. உடல் பாகங்கள் எதாவது இருக்கிறதா என்று பயத்துடன் தேடுகிறார். அந்த பெண்ணிற்கான அடையாளம் சிறிது கூட இல்லை.
மரணங்கள் மற்றும் வதந்திகள்:
42 ஆண்டுகள் மூடப்பட்ட Begunkodor நிலையம்
2009 – மீண்டும் திறக்கப்பட்ட ரயில் நிலையம்
உண்மை என்ன? மர்மமா அல்லது மனித காரணமா?
தற்பொழுது இந்த ரயில் நிலையம் அமானுஸ்யத்தை விரும்பும் நபர்கள் ஈர்க்கும் (Ghost tourism) இடமாக மாறிவிட்டது. பயத்தை திகிலை விரும்ப கூடிய நபர்கள் அந்த இடத்திற்கு வருகிறார்கள். இடையில் இங்கு பேய் இல்லை என்று நிறுபிக்க அங்கு ஒரு நாள் முழுவதும் தங்கி ஆராய்ந்து உள்ளனர். ஆனால் அது போன்ற சம்பவம் எதுவும் அவர்களுக்கு நடக்கவில்லை.
மாறாக ஒரு புதரில் இருந்த சப்தம் வந்திருக்கிறது. அங்கு அவர்கள் செல்லும் பொழுது புதரில் தங்கி இருந்த மனிதர்கள் ஓடிவிட்டார்கள் என்றும் இங்கு பேய் அமானுஷ்யம் இல்லை என்றும் ஒரு காணொளி வெளியிட்டார்கள். இருந்தும் இன்றளவும் அங்கு 5 மணிக்கு மேல் ஆட்கள் வருவதை இல்லை.
அங்கு பேய் இருக்கிறதா? அமானுஷ்யம் இருக்கிறதா? இல்லை இரவு வேலையில் சட்டவிரோதமாக செயல் செய்ய அங்கு இருக்கும் மக்கள் இதை நம்பவைத்து கொண்டு இருக்கிறார்களா என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
இது போன்று வேறு ஒரு அமானுஸ்ய பதிவில் சிந்திப்போம்.


Post a Comment