History Of Coimbatore

        



நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் அழகிய நகரம் கோயம்புத்தூர். இதை சேர, சோழ, பாண்டிய என மூவேந்தர்களும் ஆண்ட பகுதி. அதுவும் சோழர்களின் பிறப்பிடமாக (முதலாம் நூற்றாண்டு முதல் 4ம் நூற்றாண்டு வரை)  திகழ்கிறது.  இது மட்டுந்தா பெருமையா? இல்லை. தமிழ் நாட்டில் மிகவும் பழமையான கோவிலில் கரிகால சோழனால் 2ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பேரூர் பட்டீசுவரர் கோவிலும் அடங்கும். இந்த கோவில் அமைந்துள்ள இடமும் கோயம்புத்தூர் தான்.

                இது மட்டுந்தானா இல்லை தென் தென் இந்தியாவின் மான்செஸ்டர் இதே கோயம்புத்தூர் தான். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான இடங்கள் கோயம்புத்தூர் பெயர் எப்பொழுதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதனுடைய பெருமை இவ்வளவுதானா? இல்லை கோயம்புத்தூர் வரலாறு இன்னும் அதிகமான பல மர்மங்களை உள்ளடக்கியுள்ளது.


தமிழ்நாட்டின் சிறந்த பேச்சுவழக்குகளில் ஒன்றான கொங்கு தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் இடமான கோவை 9ம் நூற்றாண்டில் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரன் பெருமாள் உருவாக்கப்பட்டது. இது 9ம் நூற்றாண்டில் தான் உருவாக்கப்பட்டதா என்றால் இல்லை. சங்க காலம் முதலே இதனுடைய வரலாறு இருக்கிறது. ஆரம்பகாலகட்டத்தில் இந்த பகுதியில் பழங்குடியினர் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் முதன்மையானவர்கள் “கோசர்கள்”. அவர்களின் தலைநகரின் பெயர் “கொசம்பத்தூர்”. தற்பொழுது கோயம்புத்தூர் என்ற பெயர் இந்த பெயரில் இருந்து மருவி கூட வந்திருக்கலாம். 


இதன் பிறகு கொங்கு பகுதி ராஷ்டிர கூடர்கள் கீழ் சென்றது. அதன் பின் சோழர்கள் கைப்பற்றினார்கள். சோழர்கள் காலத்தில் பலவிதமான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டது. அதில் மிக முக்கியமான ஒன்று பெருவழி (தேசிய நெடுஞ்சாலைகள் இருப்பதைப் போல). கிட்டத்தட்ட  20ற்கும் மேற்பட்ட பெருவழிகள் கொங்கு பகுதிகளால் மட்டுமே இருந்திருக்கிறது. 


அதில் கோயம்புத்தூர் வழியாக செல்லும் ஒரு வழிதான் “இராஜகேசரி பெருவழி”.  இது சோழ நாட்டையும் சேர நாட்டையும் (தற்போதைய கேரளா) இணைக்கும் வழியாக இருந்திருக்கிறது. இந்தப் பெருவழி வழியாகவே ரோமானியரும், கிரேக்கர்களும் தமிழகத்தில் வாணிபத் தொடர்புகள் வைத்திருந்தார்கள். இது ஆதித்த சோழன் காலகட்டத்தில் முப்பது அடி அகலத்துக்கு செப்பனிடப்பட்டதாக கல்வெட்டுத் தகவல் சுண்டக்காமுத்தூரில்  உள்ளது.


இதன் பிறகு சாளுக்கியர்கள், பாண்டியர்கள், மதுரை நாயக்கர்கள், விஜயநகர பேரரசு என பல்வேறு மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது. இதற்கிடைப்பட்ட காலத்தில் அதாவது 9ம் நூற்றாண்டில்  நான்கு நாயன்மார்களில் ஒருவரான சுந்தர நாயனார் பேரூர் கோவிலில்  தேவாரம் பாடி உள்ளார் எனவும் 12ம் நூற்றாண்டில் மருதமலை முருகன் கோவிலும் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.  

 

பேரூர் பட்டீசுவரர் கோயில்


இதுபோல அணைத்து அரசர்களும் அவரவர்க்கேற்ப பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்தி உள்ளார்கள்.  இறுதியாக 1799ம் ஆண்டு மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் ஆட்சியில் இருந்து ஆங்கிலேயே கிழக்கிந்திய நிறுவனம் கைப்பற்றி 1947 வரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.  


அவ்வளவுதானா? இல்லை  தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த பெரிய நகராக இருக்கும் கோயம்புத்தூர் பற்றிய சில முக்கியமானவற்றை கீழே பார்ப்போம்.


  •  இரண்டாம் பாளையக்கார போரில் கோயம்புத்தூர் பகுதி முக்கிய பங்கு வகித்தது. 


  • 1862ம் ஆண்டு தென்னக ரயில் பகுதில் கட்டப்பட்ட மிக பழமையான ஒரு ரயில் நிலையம் என்ற பெருமை போத்தனூர் ரயில் நிலையத்திற்கே சேரும். இந்த ரயில் நிலையம் திறக்கப்பட்டு 9 ஆண்டுகள் கழித்தே சென்னை மத்திய ரயில் நிலையம் துவங்கப்பட்டது.


  • 1912 கரும்பு வளர்ப்பு நிறுவனம், வேளாண் துறையால் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய கரும்பு வகைகள் இந்தியாவில் பயிரிடப்படும் மொத்த கரும்புப் பரப்பில் 90% க்கும் அதிகமானவை. 


  • 1914ல் சாமிகண்ணு வின்சென்ட் என்பவர் தென்னிந்தியாவில் முதல் திரையரங்கனா “Variety Hall Talkies” துவங்கப்பட்டது. தற்பொழுது “Delite theatre” என்றழைக்கப்படுகிறது.


  • ரத்தினசபாபதி முதலியாரால் 1929ம் ஆண்டு உலகின் இரண்டாவது இனிமையான  நீரான சிறுவாணி தண்ணீர் கோவையை வந்தடைந்தது.


  •  நமது தேசிய கீதமான ஜன கண மண பாடல் பள்ளியளவில் முதன் முதலாக PSG சர்வஜன என்ற கல்வி நிறுவனத்தில் பாடப்பட்டது. இதுவும் கோவையில் உள்ளத்தின் என்பது சிறப்பு.


  • கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் கல்வி மையமாகும். இங்கு 7 பல்கலைக்கழகங்கள், 78 பொறியியல் கல்லூரிகள், 3 மருத்துவக் கல்லூரிகள், 2 பல் மருத்துவக் கல்லூரிகள், 35 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 150 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. 


  • இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படும் G.D நாயுடு ஒரு பிரபலமான இந்திய கண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியாளர். இவர் பிறந்த ஊர் கோயம்புத்தூர்.


  • தமிழகத்தின் டெட்ராய்ட் என அழைக்கப்படும் அளவுக்கு ஆட்டோமொபைல் மற்றும் மோட்டார் தொழிலில் கொடி கட்டிப்  பறக்கிறது கோவை.


  •  உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 கோவையில் நடைபெற்றது.


கொங்குநாடு என அதன் தாழ்மையான தொடக்கத்திலிருந்து நவீன தொழில்துறை மையமாக அதன் தற்போதைய நிலை வரை, கோவையின் பரிணாமம் குறிப்பிடத்தக்கது. கோயம்புத்தூர் அதன் வேர்களையும் பாரம்பரியத்தையும் போற்றும் அதே வேளையில், முன்னேற்றத்தின் கலங்கரை விளக்கமாகத் தொடர்ந்து நிற்கிறது. கடந்த காலமும் நிகழ்காலமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த வரலாறு என்பது நிகழ்வுகளின் பதிவு மட்டுமல்ல, நம் உலகத்தை வடிவமைக்கும் ஒரு உயிருள்ள, சுவாச அமைப்பு என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்